Tuesday, January 31, 2012


தமிழ்நாடு  மின்சார  வாரிய  குளறுபடிகள் 

1.மின்  திருட்டை  கட்டுபடுத்த
 நடவடிக்கை  எடுப்பதில்லை 

2.கட்சி  கூட்டங்கள் ,வழிபாடு  தல  விழாக்களுக்கு   
பகிரங்கமாக  மின்சாரம்  திருடபடுவதை   புகார்  தெரிவித்தால்  
கூட  மின்சார  வாரிய  ஊழியர்கள்  கண்டு   கொள்வதில்லை

3.மின்சாரம் இலவசமாக  கிடைப்பதில்லை .
அந்த  நிலையில்  ஏன்  இலவச  மின்சாரம்  
ஒரு  பிரிவினருக்கு  வழங்கி  
அந்த  செலவை  மின்  நுகர்வோர்கள்  
தலையில் கட்டி  மிளகாய்  அரைக்க  வேண்டும் ? 
அரசே அந்த செலவை ஏற்று கொள்ளவேண்டும்  

4.குடிசைகளுக்கு  தரப்படும்  இலவச  மின்சாரம்  பலவகையில்  தவறாக  பயன்படுத்தபடுகிறது . அதை  யாரும்  தடுப்பது  கிடையாது
 .
5.மின்  வாரிய  செயல்பாடுகளை  ஒழுங்கு  முறை  ஆணையம்  சரியாக  கண்காணிக்கவில்லை

6.மின்சார  சட்டம்  சரியாக  முறையாக  நடைமுறைபடுத்த படவில்லை 

7.மின்சார வாரியத்தில்  அப்பட்டமாக  லஞ்சம்  கொடுத்தால்தான்  மின்  இணைப்பு  தரப்படும்  நிலை  உள்ளது லஞ்ச  ஒழிப்பு  துறையினருக்கு யாரும் அஞ்சுவது  கிடையாது 
.
8.மீட்டர்கள்  எப்போதும்  பற்றாக்குறைதான் . மற்ற  பொருட்களும் பற்றாக்குறைதான் . அதை  போக்க  மின்சார  வாரியம்  எந்த  நடவடிக்கையும்  எடுப்பது  கிடையாது . ஒருவர்  மீது  ஒருவர்  குறை  சொல்லியே  தாமதம்  செய்கின்றனர் 

9.மின்  பிரச்சினைகளை  சரி  செய்ய  விதவிதமான  பட்டியல்  வைத்து  லஞ்சம்  வசூலிக்கபடுகிறது 
.
10.குறிப்பிட்ட  சில  தனியார்  நிறுவனங்களிடம்  அதிக  விலைக்கு  மின்சாரம்  கொள்முதல்  செய்வதால்  மின்  வாரியத்திற்கு  ஏற்படும்  நஷ்டம்   நுகர்வோர்  தலையில் சுமத்தபடுகிறது

12.எங்கு  பார்த்தாலும்  ஊழியர்  பற்றாக்குறை . காலி  பணியிடங்களை  நிரப்ப  நடவடிக்கை  எடுப்பதில்லை

13.மின்  விநியோகம்  சரிவர  நடைபெறுவதில்லை . சீரான மின்சாரம் தரபடுவதில்லை. மின் ஏற்ற தாழ்வுகளினால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி  நுகர்வோர்கள் பாதிக்க படுகின்றனர். அதற்க்கான நஷ்டஈட்டை  மின்வாரியம் தரவேண்டும் 
கருவிகள்  பராமரிப்பதில்  கவனம்  செலுத்த படுவதில்லை .

14. கூடுதலாக  வசூலிக்கப்படும் வைப்பு தொகைகளுக்கு  வட்டியும்  கொடுப்பதில்லை ,மற்றும்  இதுவரை  எவ்வளவு  வசூலிக்கப்பட்டது  என்ற  விவரமும்  நுகர்வோகளுக்கு  கொடுக்கபடுவதில்லை 

15.மாநிலத்தின்  மின்  தேவையை  முழுமையாக  பூர்த்தி  செய்ய  திட்டங்கள்  ஏதும்  சமீப  காலத்தில்  தீட்டப்படவில்லை 

மாநிலமே   மின்  தட்டுப்பாட்டில்  தத்தளிக்கும்போது  செயல்படவுள்ள  அணுமின்திட்டம்  அரசியல்  காரணங்களுக்காக  கிடப்பில்  போட்டு  பல  லச்சக்கணக்கான  மக்கள்  வேலையின்றி  வறுமையில்  வாடும்  நிலை  ஏற்பட்டும் , பல  லட்சம்  தொழிற்சாலைகள்  மூடும்  நிலைக்கும்  தள்ளப்பட்டும்  எந்த  நடவடிக்கையும்  அரசு  எடுக்காமல்  வெறும் அறிவிப்புகளையும் அறிக்கைகக்ளையும் விட்டுக்கொண்டு  பொதுமக்களின்  மேல்  வரி  சுமைகளை  ஏற்றி  மகிழ்ந்துகொண்டிருக்கிறது 

16.மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்படும் நிலக்கரி, எரிபொருள் , தளவாடங்கள் 
ஆகியவற்றில் ஊழல் அறவே ஒழிக்கப்டவேண்டும்
.
17. கற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி மின் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்

18.நிர்வாகத்தில் நவீன உத்திகள்,பிரச்சினைகளை உடனுக்குடன்  கண்டு ,சரி செய்ய தகுதியான செயல்படும் நிர்வாகிகளை இனம் கண்டு அவர்களை கொண்டு மக்களுக்கு நல்ல சேவை வழங்க  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறு செய்தால் அரசை மக்கள் வாழ்த்துவர் என்பதில் ஐய்யமில்லை..

No comments:

Post a Comment