Saturday, February 18, 2012

தொலை காட்சிகளால் என்ன பயன்?


தொலை காட்சிகளால் என்ன பயன்?

தொலை காட்சிகளால் என்ன பயன்?

1.உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும்
வன்முறை சம்பவங்கள் உடனுக்குடன்
உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு
உலகம் முழுவதும் வன்முறை கலாசாரம்
பெருக வழி செய்கிறது.

2.ஒரே செய்தியை ஒவ்வொரு தொலைகாட்சியும்
அவைகள் இஷ்டம்போல் திரித்து பொய்யான
 தகவல்களுடன் வெளியிட்டு மக்களை குழப்புகின்றன

3.சிறிய பிரச்சினைகளை கூட பெரிதுபடுத்தி
மக்களிடையே அமைதியை கெடுக்கின்றன

4.ஆபாச நடனங்கள்,நாடகங்கள்,பாடல்கள்,
போன்றவற்றை அடிக்கடி ஒளிபரப்பி
இளைஞர்களின் உள்ளங்களை கெடுக்கின்றன
.
5.பொய்யான மெயப்பிக்கப்படாத
மருத்துவ முறைகளை போலி மருத்துவர்களைகொண்டு
பணம் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றி
மோசடி செய்கின்றன

6.ஆன்மீகத்திர்க்கே தொடர்பில்லாத
போலி சாமியார்களை மக்களிடையே
விளம்பரபடுத்தி அவர்கள் மக்களிடம்
பணம் பறித்து கொழுக்க
வழிவகை செய்து தருகின்றன
.
தொலைக்காட்சிகளினால் நன்மைகள்
பல விளைந்திடினும் அதை விட
அதிக அளவில் தீமைகள்தான்
மேலோங்கிஇருகின்றன என்றால் மிகையாகாது

No comments:

Post a Comment