மீண்டும் நமது
இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்
காலையில் எழுந்ததும்
பல் துலக்க
டூத் ப்ருஷையும் பற்பசையையும்
பல்லாண்டுகளாக நாம் பயன்படுத்தி
வருகிறோம்
.
விளைவு ஒவ்வொரு ஆண்டும் இதற்காக மட்டும்
ஒவ்வொரு குடும்பத்தில் மக்கள்
பல ஆயிரம் ரூபாய்களை தண்டம் அழுகின்றோம்
.
அப்படி இருந்தும்
பற்கள் கெட்டு போய்விடுகின்றன
காரணம் பற்பசையில்
எந்த மருத்துவ குணங்களும் கிடையாது
சுண்ணாம்பும் ,நுரை
வரும் ஒரு ரசாயனமும்தான் உள்ளது
.
இதைதவிர சில மாதங்களுக்கு ஒரு முறை
டூத் ப்ருஷை மாற்ற வேண்டும்
அதற்க்கு வேறு தண்டம் அழ வேண்டும்
இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை
சுலபமாக மேனாட்டு நிறுவனகள்
நமது நாட்டின் வளத்தை கொள்ளையடித்து கொழுக்கின்றன
பல்வலி என்று
பல் வைத்தியர்களிடம் சென்றால்
பல ஆயிரங்களை இழக்க வேண்டியுள்ளது
.
ஆனால் கடந்த
காலங்களில்
எங்கும் இலவசமாக கிடைக்கும்
வெறும் ஆலம் குச்சி அல்லது
வேப்பம் குச்சிகளால் பல் துலக்கினர்
நூறு வயது
வரை பற்கள் நன்றாக இருந்தது
பல் நோய்கள்
கிடையாது
.
இன்று பிறக்கும்
குழந்தைகளே
பல் நோயுடனும் பிறக்கின்றன
வாலிப வயதிற்குள் மொத்த பற்களும்
சொத்தை பிடித்து விடுகின்றன
இனிப்பு பொருட்களும் ,
மாவு பொருட்களும்
பல்லை சீரழிக்கின்றன
இதை யாரும்
கண்டு கொள்வது கிடையாது
ஒவ்வொருவரும் தம்
வாழ்நாளில் பல்லுக்கு மட்டும்
பல லட்சங்களை செலவழிக்கிறார்கள்
அதற்காக அவர்கள் கூடுதலாக உழைக்க
வேண்டியிருக்கிறது
பல் கெட்டு விடுவதால்
கிருமிகள் உற்பத்தியாகி
முழு உடல்நலமும் கேட்டு சம்பாதிப்பது அனைத்தையும்
உடலுக்கே செலவழித்து
மாத்திரைகளை முழுங்கியே
ஆயுளை இக்கால மக்கள் முடிக்கின்றன
.
இந்நிலை மாற
வேண்டுமென்றால்
மக்கள் வேப்பம் குச்சியை மெதுவாக
மென்று பிரஷ் போல் ஆக்கி அதில்
பல்லை துலக்கினால்
பல்லில் உள்ள கிருமிகளும் சாகும்
பல்லும் சுத்தமாகும்
வீணான செலவும் மிச்சம் ஆகும்
உடல்நலமும் காக்கப்படும்
பலகேட்டு பலமணி நேரம் பல் மருத்துவமனைகளில்
காத்திருக்கும் நேரத்தை விட சில நிமிடங்கள்
தினமும் பொறுமையாக பல் துலக்கவும் நேரம்
ஒதுக்கினால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்
No comments:
Post a Comment